வெற்றி தரும் மேலாண்மை

வெற்றி தரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நிறுவனத்தில் இயக்குநராக மேலாளராக இருப்பவர்களுக்கு மேலாண்மைத் திறன் அவசியம் தேவை. இதனால் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேலாண்மை யுக்திகளை சரியாக இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். அந்த வகையில் மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை நெல்லை கவிநேசன் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில் இந்த நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் பெரியபுராணத்தை கதையாக பாடிய சேக்கிழார். அவரது வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் படைக்கப்பட்ட புதினம் இது. சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும். புதினத்தைப் படைப்பதற்காகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை, கலாச்சாரச் செழிப்பு, பழக்க வழக்கங்கள் இவை பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும. இவை அனைத்தோடு, வீரம், காதல், போர்க்களத்தந்திரங்கள் இவற்றைப் […]

Read more

கவுடலீயம் – பொருணூல்

கவுடலீயம் – பொருணூல், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், செண்பகா பதிப்பகம், பக். 664, விலை 400ரூ. கவுடல்யா, விஷ்ணு குப்தர் எனும் பெயர்களைக் கொண்டவர் சாணக்கியர். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் பொருள் நூலின் தமிழ் வடிவம்தான் கவுடலீயம். அர்த்தசாஸ்திரம் என்பது, பொருள் நூல் எனப்படும். இதன் மூன்று அதிகரணங்களைத் தமிழ் விளக்கவுரையுடன் பண்டிதமணி கதிரேச செட்டியார் படைத்துத் தந்துள்ளார். புலனடக்கத்தைத் துறவிக்கு உரியது என்று நாம் நினைப்போம். ஆனால் புலனடக்கம், மன்னனுக்கும் தேவை என்று உணர்த்தியுள்ளார் சாணக்கியர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவன், தொடுக்கப்பட்டவன் […]

Read more

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விவரங்கள் தினசரி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் எழுதியுள்ள இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கின் தன்மை, சட்ட விளக்கங்கள், அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த சுவையான வாதங்கள் அனைத்தையும் ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும் விதத்தில் விரிவாக அன்பரசன் எழுதியுள்ளார். 1991 முதல் 1996 ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள், வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாசலம், சுபா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பல்வேறு நிலச்சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், மதிப்புக் கூட்டுவரி வெள்ளை அறிக்கை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முதலியவை பற்றி விரிவாகக் கூறுகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாலசலம். பயனுள்ள நூல். இதே நூலாசிரியர் எழுதிய மகளிருக்கான சட்டங்கள் விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மூலிகை மருத்துவம், டாக்டர் எம்.எல்.ஜே. லார்ட்வின் லாரன்ஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. தமிழ் […]

Read more

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வெ. தமிழழகன், விவேக் எண்டர்பிரைசஸ், பக். 176, விலை 125ரூ. படித்து பணியில் உள்ள பெண்களுக்குக்கூட சட்டக் கண்ணோட்டம் இல்லாத இந்த நாளில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய நூல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கான வாழ்வுரிமைச் சட்டங்கள், பணிப் பாதுகாப்புச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், பாலியல் வன்முறைச் சட்டங்கள், தலித் மகளிருக்கான சட்டங்கள் என, ஏராளமாக வந்துள்ளன. இந்த நூலில் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் உள்ளிட்ட, 19 தலைப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப வன்முறைச் சட்டம் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html கம்பன் காப்பியம் என்பது ஓர் உயர்பாற்கடல். அதில் இருந்து யார் யாரோ எவ்வளவோ கருத்து அமுதத்தை அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அறியப்படாத கருத்துக்களை தேடி எடுத்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். சட்டமும் நீதியும் அவரது உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட ஒன்று என்பதால், நீதியரசர் கம்பனில் இருந்து சட்டத்தையும் நீதியையும் எடுத்துத் தருவது […]

Read more
1 5 6 7 8 9 12