கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 150ரூ. மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி! ‘உலகில் எங்கெல்லாம் வகுப்புவாதம் மேலாதிக்கம் பெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டிவிட்டது. அந்த நாடுகள் யாவும் உள்நாட்டுப்போரில் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றன அதே பாதையில் இந்தியாவையும் இழுத்துச் செல்வதுதான் இங்குள்ள வகுப்புவாத சக்திகளின் திட்டம். அவர்கள் பாகிஸ்தானை எதிரியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களது நடவடிக்கை அரசியல் ரீதியாக இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்’ என்ற முன்னுரையைப் படிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது. புத்தகமாக இடம்பெற்றுள்ள 44 கட்டுரைகளில் 8 […]

Read more

நன்னயம்

நன்னயம், வசீகரன், மின்னல் கலைக்கூடம், விலை 250ரூ. சிறுபத்திரிகையாளர், கவிஞர் என அறியப்பெற்ற வசீகரன் எழுதிய 83 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும்கூட, இன்றைக்கும் வாசிக்கையில் கட்டுரைகளின் பொருண்மையும், எளிமையும் வசீகரிக்கவே செய்கின்றன. மாற்றங்களும் தடுமாற்றங்களும், கேட்பவர்களும் கேளாதவர்களும், மலட்டுக் காரணங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்க்கை நெறியைச் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றன. நூலாசிரியரின் தொடர் புத்தக வாசிப்பும், பத்திரிகை அனுபவமும் கட்டுரைகளின் உருவாக்கத்துக்குக் கை கொடுத்துள்ளன. நன்றி: தி இந்து, 9/9/2017.

Read more

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more

கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும், ப. முருகன், கங்காராணி பதிப்பகம், பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாஃட் நிறுவனம் தயாரித்துள்ள சொல் 39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஔவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை புலப்படுத்தும் […]

Read more

கேள்வி யுத்தம்

கேள்வி யுத்தம், எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன், ரோமரிஷி வெளியீடு, விலை 55ரூ. தாய், தந்தை, குரு, நட்பு, எனது கிராமம் என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதை. அதைத் தொடர்ந்து அது தொடர்பான விளக்கக் கட்டுரை என இந்த நூலைப் படைத்துள்ளார், 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன். ‘குண்டூசி விற்றாலும் பீரங்கி விற்றாலும் தொழில் தர்மம் வேண்டும்’ ‘குருவை நேசிக்காத எவரும் கல்வி மீது உரிமை கொண்டாட முடியாது’ என்பன போன்ற வாசிக்கத் தூண்டும் வரிகள். நன்றி: […]

Read more

தலைவர்கள் தேவை

தலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. “உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. 15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

உலக வரலாறு

உலக வரலாறு, ஐ. சண்முகநாதன், பூம்புகார் பதிப்பகம், விலை 750ரூ. உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் என்ற தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி உலகில் நடந்த முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக்கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற அனைத்துச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ. 18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப். மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை […]

Read more
1 70 71 72 73 74 88