அவளது பாதை

அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 76, பாரதீஸ்வரர் காலனி, 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. எந்தவொரு தேவைக்கும் அரசை அணுகும்போது, அதற்குரிய விண்ணப்பத்துடன் அணுக வேண்டும். அந்த விண்ணப்பப்படிவங்கள் முறையாக இல்லையென்றாலோ, சரியாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அவை நிராகரிக்கப்பட்டுவிடும். இவ்விஷயத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்களே திணறும் நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை எளிதாக்கும் வகையில், அரசுத் துறைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய விண்ணப்பங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். பொதுவாக, […]

Read more

போதை ராஜ்யம்

போதை ராஜ்யம், ரா.கி.ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ரா.கி. ரங்கராஜன் நக்கீரன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதையின் புத்தக வடிவம். கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் பற்றிய இந்தக் கதையில் விறுவிறுப்பு, திகில், திருப்பங்கள் எல்லாம் உண்டு.   —-   இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், நலவாழ்வு எல்லோருக்கும் அடையாளம், திருச்சி 621310, விலை 40ரூ. சர்வதேச அளவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற மேயோ […]

Read more

மண் கசந்தால் மானுடமே அழியும்

மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 86, விலை 60ரூ. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நாம் மாசுபட வைத்துவிட்டோம். அதனால் மழை தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. உணவு தரும் பயிர்கள் இல்லாமல் போகின்றன. ஆலைகளின் கழிவு நீரால், நீர் நிலைகள் மாசடைந்து மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் மாசடைய வைக்கிறது. வளமான, அழகான, இனிமையான, சத்தான மண்ணைக் கெடுத்து, வருங்கால இனத்தையே கெடுத்து வருகிறான் மனிதன். நமது […]

Read more

அவரது நினைவுகள்

அவரது நினைவுகள், தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில் யூமா. வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 125, விலை 100ரூ. தகழி 1985ல் ஞானபீட விருது பெற்றவர். செம்மீன், ரண்டிடங்கழி, தோட்டியின் மகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளவர் தகழி. பெரும்பாலான நாவல்கள் மனித வாழ்வின் தீவிரத் துன்பங்களிலிருந்து உருப்பெற்றவை. அந்த வரிசையில் ஓர் இருட்டுலக நிலவெளியை முற்றாகப் பெயர்த்து நம் மன மையத்தில் வைத்து வெளிச்சம் கொடுக்க வைத்த பெரு […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ. இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற […]

Read more

நிமித்தம்

நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை வெளியீடு, 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 375ரூ. விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப்பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, ட்ராட்ஸ்கி மருது, தொகுப்பு அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. வாயால் சொல்லப்படுகிற வார்த்தைகளின் மூலம் பலநேரம் நமக்குப் பொய்யே கிட்டுகிறது. ஆனால் கோடுகள் ஒருபோதும் பொய்யே சொல்வதில்லை என்கிற ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சொற்களுடன் தொடங்குகிறது அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது என்கிற நூல். நூலை கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ளார். மருதுவின் தாயார் ருக்மணி, மனைவி ரத்தினம், தம்பி போஸ் ஆகியோர் மருதுவைப் பற்றிச் சொல்லும் […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ. புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.   —- தன்னம்பிக்கை ஒரு […]

Read more
1 704 705 706 707 708 841