திருக்கோளூர் ரகசியங்கள்

திருக்கோளூர் ரகசியங்கள், வ.ந.கோபால தேசிகாசார்யார், அக்ஷரா பப்ளிகேஷன்ஸ், 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மென்ட்ஸ், 2வது தெரு, 3வது மெயின் ரோடு, கிழக்கு சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை 35, பக்கங்கள் 506, விலை 395ரூ. அக்ரூரரின் பாக்கியம் கடவுளில் கலந்தவள், தாயாக வந்த பக்தை, மாண்டவர் மீண்ட அதிசயம், விதுரரின் விருந்தோம்பல், இரண்டு மாலைகளைக் கொடுத்த தொண்டரடிப் பொடியாழ்வார் என திருக்கோளூர் திருத்தலத்தின் பெருமைகளையும் ரகசியங்களையும் அழகுறத் தந்து அசத்தியுள்ளார் நூலாசிரியர்.   —-   சௌபாக்கியமளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஹநுமத்தாசன், அருள்மிகு […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி. ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024, பக்: 416, விலை: ரூ. 260. ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி. ஞனையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய – கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ – ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய […]

Read more

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ. சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.   —-   நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் […]

Read more

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா, மணவை. பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 278, விலை 160ரூ அம்மாவே தெய்வம், உலகிலே அம்மாவைக் கொண்டாடாதவர்கள் யார்? எழுபத்தைந்து வெற்றியாளர்கள் தங்கள் அன்னையரைப் பற்றிச் சொல்லும், போற்றுதல் கட்டுரைகள் அடங்கிய அருமையான தொகுதி. திலகவதி ஐ.பி.எஸ்., தன் அம்மா பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். அவர் அம்மாவுக்கு எழுதிய கடிதத் தகவல் சுவையானது. அப்பா பார்த்த ஜாதகப்படி எனக்கு திலகவதி அம்மையார் என்று பெயர் சூட்டினர். பள்ளியில் என் பெயரை, ஆசிரியர் […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம்

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம், பாகம் 3, தமிழ் உரை: ப்ரம்ம ஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள், ஆசிரியர்: கே.என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 540, விலை 500ரூ. வேதாந்த தத்துவத்தில் உபநிஷத்துகள், பகவத்கீதை, ப்ரம்ம ஸ்ரீதரம் என்ற மூன்று விஷயங்கள் முக்கியம். அவை ப்ரஸ்தானங்கள் எனப்படும் ப்ரம்ம சூத்ரத்தை நையாயப்ரஸ்தானம் என்கின்றன. நையாயம் என்றால் கோர்வையான தாக்கம். ப்ரம்ம சூத்ரங்கள் நாலு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு சாங்கர பாஷ்யத்தின் 3வது பாகம் […]

Read more

ஊமைத்துரை வரலாறு

ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ. இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் […]

Read more

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள்

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள், வ. இளங்கோ, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ. திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ரசிகர்களின் காதுமடல்களில் இன்றளவும் வீற்றிருக்கும் பல மகத்தான பாடல்கள் உண்டு. தேசம், அரசியல், தொழிலாளர் நலன், தத்துவம், சமூகம், காதல், குழந்தைகள், சிறுவர், இயற்கை, கதை, நகைச்சுவை, பல்சுவை என்று ஒவ்வொன்றிலும் கவிஞரின் கருத்தாளமிக்க சொற்கள் படிக்கப்படிக்க பரவசப்படுத்துகின்றன. – ஸ்ரீநிவாஸ்.   —-   சுந்தரர் தேவாரம்(மூலமும் உரையும்), புலவர் சீ. […]

Read more

பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு)

பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு), உருவாக்கியவர் – ஆர்.கே. சுப்ரமணின், ஆர்.கே.எஸ்.புத்தகாலயம், 25, பந்தடி 1வது தெரு, மதுரை 625001, விலை 66ரூ. மாபெரும் கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் வரலாறு படைத்த புதினம். ஐந்து பாகங்கள், மொத்தம் 2500 பக்கங்கள். அதை அவசரகால இளைஞர்கள் படிக்க நேரம் கிடையாது. அதற்காக அதன் கருவைச் சிதைக்காத, சுருக்கப்பதிப்பாக அழகு குலையாமல் உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. தமிழ் வளர உதவும். ஆங்கிலத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புகள் சுருக்கப் பதிப்பாக வெளியிடுவது மரபாக இருக்கிறது. இளைஞர் […]

Read more

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்),

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்), தொகுப்பாசிரியர், ரேவதி, அடையாளம் சங்கமா, 1205/1, கரூப்பூர் சாலை, புத்தானந்தம்-621310, பக்கங்கள் 115, விலை 65ரூ. தமிழில் திருநங்கையரைப் பற்றிய முதல் நூல் உணர்வும் உருவமும் என்ற நூலாகும். பல அரவாணிகளின் வாழ்க்கை கதைகளின் தொகுப்பான இந்நூலை எழுதியுள்ள ரேவதி ஒரு அரவாணி. ஆண் பாதி, பெண் பாதியாகக் கொண்ட அர்த்த நாரீஸ்வரரை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில் அரவாணிகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றனர்? மகாபாரதத்தில் வரும் சிகண்டியை புரிந்து கொள்வோர் அரவாணிகளை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஆண் உடலைக் […]

Read more
1 4 5 6 7 8 11