புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள்

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள், உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியீட்டகம். அடமானத்தில் சங்கராபரணம் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியிட்ட, உ.வே.சா.வின் உரைநடை நூல்கள் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். கடந்த சில ஆண்டுகளாக, இந்நூலின் மறுபதிப்பு வெளியாகவில்லை என்பது கவலைக்குரியது. இன்றைய இளைய சமூகத்துக்கு, இந்த நூல் அரிய பொக்கிஷம். தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர் சங்கராபரணம் நரசய்யா. சங்கராபரணம் ராகத்தில் வல்லமை பெற்றவர். பண நெருக்கடி ஏற்படவே, செல்வந்தராக இருந்த, கபிஸ்தலம் மூப்பனாரிடம் கடன் கேட்கிறார் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. வாசனின் மூதாதையர்கள்). கடனுக்காக, […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இப்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டுரை எழுதுவதும் எளிது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கப்பலில் உலகம் சுற்றுவது எளிதல்ல. மகாத்மா காந்தியைப் பற்றி முழு நீள திரைப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்த ஏ.கே. செட்டியார் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த புத்தகத்தை எழுதினார். அக்காலத்தில் வெளிநாடுகள் எவ்வாறு இருந்தன, அயல்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை எல்லாம் சுவைபட எழுதியுள்ளார் […]

Read more

கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள், குன்றில் குமார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-7.html உலக அளவில் பிரபலமாக விளங்கும் சில உளவுத் துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஒரு நாடு பாதுகாப்புடன் இருக்க, தனக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் பலம், பலவீனம் என்ன? அவர்களை வீழ்த்த என்னென்ன வழிகள் உள்ளன என்பன போன்ற பல விவரங்களை, எதிரியின் இருப்பிடங்களுக்கே சென்று வேவு பார்த்து அறிவதுதான் அந்நாட்டின் உளவுத் […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது […]

Read more
1 2 3 4 5 6 8