காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ. அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், விலை 90ரூ. திண்ணைகளால் நிரம்பிய கும்பகோணம் அவள் சென்ற பாதையில் அவன் கண்களும் சென்றன. அவள் மீது பதித்த பார்வையை எடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் சற்றும் விரசமில்லாமல் எழுதி ஒரு வித்தியாசமான காதல் கதையைத் தந்திருக்கிறார் ஜனகன். கும்பகோணத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் போக நேர்ந்த இருவர் காலங்கடந்த காலத்தில் காதல்வயப்பட்டுக் கல்யாணமும் செய்து கொள்வதுதான் கதை. சீர் முறுக்கைப் பற்றிய வர்ணனை, சாப்பிடிப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசிவாரியர், தமிழில் இரா. முருகவேள், நியூ ஸ்கீம் ரோடு, பக். 272, விலை 220ரூ. தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒருவரின் அனுபவப் பதிவுகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்திருக்கிறது. ஜனார்த்தனன் பிள்ளை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகத் தூக்கிலிடுபவராகப் பணியாற்றியிருக்கிறார். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் மொத்தம் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார் இவர் நாகர்கோவிலில் வாழ்ந்த தமிழர். திருவிதாங்கூரில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது போன்ற ஆச்சரியமளிக்கும் செய்திகளும் இந்நூலில் ஆங்காங்கே […]

Read more

ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், தொகுப்பு காந்திமதி கிருஷ்ணன், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 100ரூ. நம்பிக்கைதான் மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். அது மட்டும் இருக்குமானால் அவனால் எல்லாக் கஷ்டங்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் மிக மோசமானவற்றையும் ஊக்கத்தை இழந்துவிடாமல், மனமுடைந்து போகமல் எதிர்த்து நிற்க முடியும். அப்படிப்பட்டவன் கடைசிவரை ஆண்மையுடன் போரிடுவான். அமைதியான அசையாத மனமும் பிராணனும் உள்ள தன்மைக்கு சமதை என்று பொருள். பிராண இயக்கங்களான கோபம், அதீத உணர்ச்சி, செருக்கு, ஆசை முதலியவை மீது […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி, பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இந்நூலாசிரியர் மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், வானொலி நாடகம், டி.வி. தொடர், வசனப் பயிற்சியாளர், தயாரிப்பு நிர்வாகி, ஒருங்கிணைப்பாளர் என்று தனது 55 ஆண்டு கால கலையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர். அந்த அனுபவங்களைத்தான் இந்நூலில் சுவையாகவும், யதார்த்தமாகவும் கூறியுள்ளார். இது சுயவரலாறாக இருந்தாலும், தன்னோடு சம்பந்தப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவர்களின் பண்புகள், செயல்பாடுகள், அன்றைய சூழ்நிலைகள் போன்றவையும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, […]

Read more

நடன மங்கை

நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் […]

Read more

அவரவர் கை மணல்

அவரவர் கை மணல், ஆனந்த்-தேவதச்சன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-2.html ஒரு வாய் நீரும் ஒரு தருணமும் இன்றைக்குத் தமிழில் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின்றன. சில தொகுப்புகளுக்கு மட்டும் தனித்துவமான மொழியும் பொருளும் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில தொகுப்புகள் மட்டுமே புதிய போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில் 1981ல் வெளிவந்த அவரவர் கை மணல் முக்கியமானது. 80களின் தொடக்கத்தில் எழுத வந்த தேவதச்சன், ஆனந்த் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய […]

Read more
1 148 149 150 151 152 336