தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசி வாரியார், தமிழில்-இரா. முருகவேள், உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638366, ஈரோடு மாவட்டம், விலை 140ரூ. இந்தியாவில் வேறெப்போதையும் விட தூக்குதண்டனைக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் கொடூரமான குற்றங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று கூக்குரலிடுவதைக் கேட்கிறோம். ஆனால் அவர்கள் மரணதண்டனை என்றால் என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் 117 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாக்குமூலத்தை சசி வாரியர் […]

Read more

நாம் பிரிந்துவிட வேண்டாம்

நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ. ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட […]

Read more

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ. கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் […]

Read more

கம்பன் அன்றும் இன்றும்

கம்பன் அன்றும் இன்றும், பேராசிரியர் கு. ராமமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 304, விலை 230ரூ- நூலாசிரியர், பேராசிரியர் கு. ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-148-9.html இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம், மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத்கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more

முடிவுகள் முடிவானவை அல்ல

முடிவுகள் முடிவானவை அல்ல, டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அச்சகம், 29/ஏ-8 தெற்கு கால்வாய்க்கரைச் சாலை, சென்னை 28, பக். 116, விலை 50ரூ. அலைபாய்கின்ற மனம் முடிவு எடுக்க இடர்ப்படும். மனதைத் திடப்படுத்தி முடிவெடுத்தல் என்பது ஒரு கலை. இது காலம் காலமாக இந்திய தத்துவ அறிஞர்கள் பேசம் விஷயம். ஆனால் நடைமுறை யதார்த்தங்களுடன் ஆசிரியர் இதை விளக்கியிருப்பது சிறப்பானது. எல்லா முடிவுகளுக்கும் மாற்று முடிவுகள் இருக்கின்றன என்பதை நடைமுறை வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை வைத்து தனித்தனித் தலைப்புகளில் ஆசிரியர் இயல்பாக […]

Read more

சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல்

சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல், Cooridinator Dr. Tarachand. Publication-TaTA MCGraw Hill. Eduvation Private Limited. New Delhi. பக். 1330, விலை 1195ரூ. ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று, நம் நாட்டின் ஆட்சியாளர்களில் ஒருவராக உருவாக வேண்டும் என்பது படித்த நம் இளைஞர்களின் இலட்சிய நோக்காக உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அண்மையில் இதற்கான பாடங்களையும் தேர்வு கேள்வி முறையையும் மாற்றி அமைத்துள்ளது. இதுவரை முதல் தாளில் இருந்த சோதனைப் பகுதி இரண்டாம் தாளில் தரப்படுகிறது. […]

Read more

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி […]

Read more
1 269 270 271 272 273 336