இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013). —– ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: […]

Read more

தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80. இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் […]

Read more

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும், வை. மயில்வாகணன், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரச்சாரக்குழு, பக்கங்கள் 253, விலை 80ரூ. கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்திவரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக […]

Read more

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ. எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் […]

Read more

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் செந்தமிழும் நாப்பழக்கம் – வே.குழந்தைசாமி; பக்.62; ரூ.50; கோயமுத்தூர் கல்வி அறநிலை, 14, வ.உ.சி.சாலை இரத்தின சபாபதிபுரம், கோயமுத்தூர் -641 002. நன்றி: தினமணி (11-3-2013). விவசாயிகளின் வேதனைக்குரல் – கே.துரைசாமி; பக். 128; ரூ. 25; நல்லம்மாள் கருப்பண கவுண்டர் அறக்கட்டளை, பி – 39, ஹாட்கோ காலனி, காந்தி மாநகர், கோயமுத்தூர் – 641 004. நன்றி: தினமணி (11-3-2013). ஒரு நாதஸ்வரத்தின் பயணம் – வி. சந்திரசேகரன்; பக். 144; ரூ. 70; கவிதா பப்ளிகேஷன் சென்னை – […]

Read more

திரையுலகப் பிரபலங்கள் – 1

திரையுலகப் பிரபலங்கள் – 1, ஆசிரியர்: ஏ. எல். எஸ். வீரய்யா, விலை: ரூ 125, வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை -17.  சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர், கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் மற்றவர்களுக்கும், […]

Read more

தாமிரபரணிக் கரை

தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1; அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more
1 308 309 310 311 312 336