நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், ராம கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 600031, பக். 294, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html இந்திரா பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால நிகழ்வுகளை, ஒரு இந்துத்வ கண்ணோட்டத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். அரசியல் ரீதியாக ஜனநாயக வாதிகளால் நெருக்கடி நிலையை விமர்சித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூலாசிரியர். ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் […]

Read more

வைரமணிக்கதைகள்

வைரமணிக்கதைகள், தாரிணி பதிப்பகம், பிளாட் எண். 4ஏ, ரம்பா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 20, விலை 450ரூ. ‘எழுத்தாளர் வைரவனின் 80 சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வைரமணிக்கதைகள் என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதே என்பதை பல கதைகள் நிரூபிக்கின்றன. நன்றி: தினத்தந்தி 16/10/2013.   —-   சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 150ரூ. சிறுவருக்கு மகாபாரதம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த […]

Read more

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, பக். 224, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-0.html பாரதக் கதைப்பகுதிகள் நம் பாரத நாட்டில் பழங்காலந்தொட்டு, இதிகாசமாய், பாட்டி சொல்லும் கதைகளாகவும், தெருக்கூத்துக்களாகவும், நாட்டுப்புறப்பாடல்களாகவும், இலக்கியங்களாகவும் வழக்காற்றில் உள்ளன. நாட்டுப்புற இயலை நாட்டார் இயல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாட்டார் கதைகளாய் சிற்றூர்களில் (கிராமங்களில்) வழங்கும் பாரதக்கதைப் பகுதிகளைத் தொகுத்து அழகுற எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள். அல்லி […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது […]

Read more

மரபு

மரபு, இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான், இளம்பிறை பதிப்பகம், பக். 126, விலை 90ரூ. நூலாசிரியர் எழுதியுள்ள முப்பது உருவக் கதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை பெரும்பாலும் மரபு வழியில் அமைந்துள்ள தத்துவ உருவாக்கம். மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. -சிவா. நன்றி: தினமலர், 18/8/2013   —-   ஜன கண மன, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 60ரூ. காந்திஜியை கொல்வதற்கு கோட்சே கும்பல் முதலில் முயன்று தோற்றது, பின் வெற்றி பெற்று இறுதியில் காந்திஜியைக் கொன்றது. இன்று எல்லாருக்கும் […]

Read more

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல், முத்துநாடு பப்ளிகேஷன், 48/31, புதூர், அக்ரகாரம், தேவகோட்டை 630302, விலை – முதல் தொகுதி ரூ.600, இரண்டாம் தொகுதி ரூ 750. வானொலியில் தினமும் ஒரு தகவலைச் சொல்லி, மக்களை சிந்திக்கச் செய்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தகவலுடன் சேர்த்து அவர் சொன்ன குட்டிக்கதைகள் அழகானவை. அற்புதமானவை. அவர் சொன்ன நூற்றுக்கணக்கான குட்டிக்கதைகள், இரண்டு பெரும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை படிப்பு, அறிவு, பந்தபாசம், மனித இயல்புகள் இவ்வாறு பொருள் வாரியாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எல்லா நூல் நிலையங்களிலும் இடம் […]

Read more

அம்மாக்கள் வாழ்ந்த தெரு

அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ. கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை […]

Read more

நானும் மனிதனும்

நானும் மனிதனும், இளஞ்சேரன், சம்பிரித்தி பதிப்பகம், 10, ஜானகிராம் காலனி விரிவு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 184, விலை 120ரூ. மனுநீதிச் சோழன், பசுக்கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றான். இது நீதி. மனிதர்கள் ஒவ்வொரு நாளும், ஆடு, மாடு,  கோழியென நூற்றுக்கணக்கானவற்றைக் கொன்று தின்கிறார்களே. மனுநீதிச் சோழனை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மனிதர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க முடியுமா? இதுபோன்ற படிப்பினை வழங்கும் 48 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தனையும் மனிதம் பற்றி உணர்த்துபவை. […]

Read more
1 66 67 68 69 70 80