குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு […]

Read more

எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?, பயிற்சிப் புத்தகம்-ரா.கி. ரங்கராஜன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 115ரூ. கதையினால் உலகத்தை வெல்லலாம். மனிதனைத் திருத்துவது, வழிகாட்டுவது, மேம்படுத்துவது, சிரிக்க வைப்பது, தியாகம் செய்ய வைப்பது, குடும்பத்துக்கும் தேசத்திற்கும் பணியாற்ற வைப்பது எல்லாமே கதைகள்தான். அந்தக் கதைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான் பயிற்சியின் மூலம் மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார். இவை முன்பு அஞ்சல்வழிக் கல்விபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்டாலும், இன்று அவை ஒருசேர, ஒரே […]

Read more

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, சுமதிஸ்ரீ, கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-885-5.html பெண் மனசு பட்டிமன்றங்களிலும் வழக்காடு மன்றங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சுமதிஸ்ரீயின் கவிதைத் தொகுப்பு இது. பாசமுள்ள தந்தையை விட்டுவிட்டு ஒற்றை ரோஜாவுக்காகவும் ஒரே ஒரு வாழ்த்து அட்டைக்காகவும் ஓடிவந்துவிட்ட மகளின் பாச உணர்வுகளைப் பேசுகிறது முதல் கவிதையான தகப்பன் சாமி. அலர், மஞ்சள், நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒருமணி நேரம், மருதாணி போன்ற […]

Read more

இசைஞானி இளையராஜாவின் பால் நிலாப்பாதை

பால் நிலாப்பாதை, இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், பக். 208, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-373-6.html திரையுலகில் இசைஞானியின் வெற்றிகளும், சாதனைகளும் அற்புதமானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவருடைய வாழ்க்கைப் பயணம், கிராமத்துப் புழுதி மண்ணில் துவங்கி, உலகெங்கிலும் சுற்றி வருகிறது. அவரது இசைப் புகழோ ககனப் பெருவெளியெங்கும் காற்றுப் போல பரவி, வியாபித்திருக்கிறது. வாழக்கை, தொழில் சார்ந்த அனுபவங்களைத் தாண்டி அவருடைய ஆன்மிக அனுபவங்களும், நம்மை அவரருகே கொண்டு வந்து நிறுத்தி, அவரை அண்ணாந்து பார்க்க […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806)

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806), செ. திவான், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-5.html வேலூர் புரட்சி உள்ளிட்ட இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்து, பல தியாகங்களைச் செய்த தமிழக முஸ்லிம்கள் பலரின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றையெல்லாம் தொகுத்து, விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல் இது. தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றியதிலிருந்து, கோல்கொண்டாவின் மீர் ஜும்லா, […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more

தரிசனம்

தரிசனம், குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-1.html தரிசனம் என்ற பெயரை கேட்டவுடனேயே, ஏதோ இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு இறைபக்தி தொடர்பாக எழுதியிருப்பாரோ? என்ற எண்ணத்துடன் இந்த புத்தகத்தை திறக்கக்கூடாது. முழுமையாக கவிதை நடையில் இல்லாமல், அதே நேரத்தில், கவிதையின் சுவையை ஒரு உரைநடையில் ருசிக்கும்வகையில், கடவுளை காண்பது மட்டும் தரிசனம் அல்ல, உன்னையே நீ ஆழ்ந்து உணர்வதுதான் உண்மையான தரிசனம் […]

Read more
1 3 4 5 6 7