கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.   —- நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ. இறைவனை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 150ரூ. கட்டுரைகள், பல வகையாய் அமையும். அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள். இந்த நூலில் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி, வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் சொல்லோவியம் வரைந்துள்ளார் மாரி செல்வராஜ். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- நெடுநல் சுடர், கவிஞர் பாராள்வோன், முகிலரசி வெளியீடு, ஆர்க்காடு, விலை 85ரூ. பெற்றோர் பாசம், காதல் நேசம், நேர்மை, நல்லொழுக்கம், சமுதாய அலசல், சுற்றுச்சூழல், தாய்மை என பல்வேறு பிரிவுகளை […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா, சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html எளிய மனிதர்களின் கதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் நம்காலத்தின் ஆகச்சிறந்த யதார்த்த எழுத்தாளர் இமையம். இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கொலைச்சேவல். கிராமப்புறங்கள் நவீன வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றிய பெருமூச்சுகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் உள்ளன. வாசிப்பவர்களை அறையும் பட்டவர்த்தனமான யதார்த்த உண்மைகளைச் சொல்லும் கதைகளாக இவை படைக்கப்பட்டுள்ளன. அணையும் நெருப்பு என்கிற கதையில் வரும் கணவனை இழந்து சமூகத்தாலும் […]

Read more

பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை […]

Read more

அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more
1 58 59 60 61 62 80