தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் […]

Read more

கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

நெஞ்சமெல்லாம் நீ

நெஞ்சமெல்லாம் நீ, சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 140ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 24 சிறுகதைகள் கொண்ட நூல். கதைகள் ஏற்கனவே பிரபலமான பத்திரிக்கைகளில் பிரசுரமானவை. எனவே இலக்கிய அங்கீகாரம் பெற்ற சிறந்த கதைகள் என்பதை சொல்லத் தேவையில்லை. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.   —- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-181-6.html அவுரங்க என்ற சொல்லுக்கு அரசு சிம்மாசனம் […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more

தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more
1 6 7 8 9