தென்றல் வீசிய திரை வானம்

தென்றல் வீசிய திரை வானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2 புத்தகங்கள் விலை ஒவ்வொன்றும் ரூ. 500. தமிழ்த்திரைபட வரலாற்றை 2 புத்தகங்களில் விவரிக்கும் நூல். இதன் ஆசிரியர் டி. ஸ்ரீனிவாஸ், நிறைய விஷயங்களைக் கூறுகிறார். இடையிடையே, இந்திப்பட வரலாறு, தெலுங்குப்பட வரலாறு ஆகியவற்றையும் புகுத்தி உள்ளார். படங்கள் மிகச்சிறியவையாக உள்ளன. சற்று பெரிதாக்கி இருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —-   கற்க கசடற விற்க அதற்குத்தக, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கல்வி இப்போது வணிகமாகிவிட்டது. அதுவும் அதிக வருமானம் […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. விடுதலைபெற்று 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுயசிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை என் 34 ஆண்டுக்காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன் என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா. முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வுயும் அகப்பட்டுத் தவிக்கிறதே? என்கிற ஆதங்கத்தொடு பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான். மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பல நூறு […]

Read more

கவியமுதம்

கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ. கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. […]

Read more

மது விழிப்புணர்வுக் கல்வி

மது விழிப்புணர்வுக் கல்வி, கோ. பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, பக். 160, விலை 100ரூ. மது விற்பனை இலக்கு, மதுவினால் ஏற்படும் விபத்துகள், மதுப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், நிதானம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் – மற்றவரைக் கொன்றவர்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அசிங்கப்படும் இன்றைய இளம்தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பற்றிய செய்திகள் போன்றவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். மது உருவான வரலாறு, புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணக்கிடைக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாட்டுப்புறப் […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும்போதுதான், முழுமை பெறுகிறான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபின், வேறு யாருடைய நடிப்பையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படி ரசித்தாலும், அவர்களுக்குள் சிவாஜியின் வடிவத்தை பார்க்கிறேன் என்ற ஒய்.ஜி.மஹேந்திரா சிவாஜியுடன் நடித்தபோது, பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை ரசித்து, சுவைத்து, சுவாசித்து கட்டுரை வடிவில் படைத்திருக்கிறார். சிவாஜி பற்றிய அரிய புகைப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச்செய்து, அவரது இனிய […]

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், […]

Read more

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more
1 10 11 12 13 14 21